Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காசநோய் ஒழிப்பு முகாம்

ஜுலை 04, 2023 01:24

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் காசநோய் ஒழிப்பு முகாம் நடந்தது.

நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்  சார்பாக குமாரபாளையம் காளியம்மன் கோவில் முன்பு, காசநோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா?  என பொதுமக்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில்  தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம்  75 நபர்களுக்கு மார்பு  எக்ஸ்ரே, சளி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில்  நாமக்கல் மாவட்ட காசநோய் துறை துணை இயக்குனர் டாக்டர் வாசுதேவன், மருத்துவ அலுவலர் டாக்டர் ரம்யா பங்கேற்று, பொதுமக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு வழங்கினர்.  

முதுநிலை சிகிச்சை மேற்பாற்வையாளர்  அருள்மணி, சுகாதார ஆய்வாளர்  பிரவீன் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களும் கலந்து கொண்டு காசநோய்   பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்